Sunday, November 15, 2009

வார இறுதியில் - 5

So cute : மகள் டென்னிஸ் வகுப்பில் இன்று அவ்வளவு ஆர்வமாக பங்கு பெறவில்லை. வகுப்பு முடிய 5 நிமிடங்கள் இருக்கையில் 10-12 வயது பெண்ணும், அவள் அம்மாவும் என் மகள் விளையாடுவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அந்தப் பெண் வெளியில் நின்று கொண்டு இவள் பந்தை அடிக்க முயலும்போதெல்லாம் 'Come on, Come on' என்று ஆர்வத்துடன் கத்திக் கொண்டிருந்தாள் (அவள் சிறு வயதில் விளையாட ஆரம்பித்தது நினைவுக்கு வந்திருக்கலாம்).

என் மகள் அடித்த ஒரு ஷாட் மறு பக்கத்தில் விழ இந்தப் பெண்ணுக்கு ஏக மகிழ்ச்சி. ‘She did it!!' என்று இவள் தாயாரிடம் சொல்ல அவரும் ‘yeah...she is so tiny yet she hits well' என்று ஆமோதித்தார் (இத்தனையும் என் பக்கம் பார்க்காமலே). நான் திரும்பி சிரித்துக் கொண்டே ‘இதுதான் அவள் அடித்த உருப்படியான் ஷாட்’ என்றேன்.

அந்தப் பெண் என்னைப் பார்த்து ‘She still succeeded' என்றாள். மானசீகமாக அவளுக்கு ஒரு சல்யூட் வைத்தேன். எதிர்காலத்தில் இந்தப் பெண் சிறந்த பயிற்சியாளராவாள்.

Sachin Tendulkar: 20 வருடங்கள் கிரிக்கெட்டில் செய்யாத சாதனைகள் இல்லை. அதைப் பற்றி விரிவாக...வேண்டாம்....வார்த்தைகள் அவரின் சாதனைகளின் மதிப்பைக் குறைத்து விடும். Thank you Sachin.

இலங்கை : இலங்கைக்கு பிரணாப் சென்றது தொடர்பாக டிவிட்டரில் ‘oruppakkam' மற்றும் 'kaanaprabha' இருவரின் கருத்து வேற்றுமையைப் படிக்க நேர்ந்த்து. ஒன்று புரிந்து கொண்டேன். உணர்ச்சி வயப்ப்டாமல் இவ்வகை கலந்துரையாடல்கள் நடப்பதில்லை.

சாரு: சாருவின் சமீபத்திய அலம்பல்கள் தாங்க முடியவில்லை (அவரின் நித்யானந்தர் கட்டுரைகளை சோகமாக இருக்கும் போது வாசித்து வெளியே வரும்போது வயிற்றைப் பிடித்துக் கொண்டு வருவேன், அவ்வள்வு காமெடி). இப்பொது அவரின் ஒரு நாடகத்தில் நடந்த கலாட்டாவை விரிவாக (?!) பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறார். இதில் என்ன புதிதாக இருக்கிறது? 2002-ல் இருந்து இவரின் எழுத்துக்களைப் படிக்கிறேன். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை இந்த கலாட்டாவைப் பற்றி ஏதாவது சொல்லுவார். கேவலம் கிராம விழாக்களில் போடும் ரெக்கார்ட் டான்ஸ் நிகழ்ச்சியில் கூட இந்த கலாட்டாக்கள் நடக்கும். இவர் என்னவோ மொத்த தமிழகத்திற்க்கும் கலாச்சாரம் கற்றுக் கொடுக்க வந்து இவரை மற்றவர்கள் கொலை செய்ய முயன்றார் போன்ற பில்டப். நினைப்புதான்...

காமெடி: வீட்டில்/அலுவலகத்தில் பல தலைவலிகள் இருக்க சிவத்தமிழோன் என்பவரும் சுகுணா திவாகரும், திருக்குறள் சைவ நூலா இல்லை சமண நூலா என்று வாழ்க்கைக்குத் தேவையான வாதம் புரிந்தது. சாதி மத பேதங்களை ஒழிக்க வேண்டும் என்று கூக்குரலிட்டுக் கொண்டு அதைத் தீவிரமாக நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று பெரியார் சொல்லாததை அவரைப் பின்பற்றுவதாக சொல்பவர்கள் நினைவில் வைத்திருப்பது பெரியாரிசத்தின் மிகப் பெரிய (சோகமான) தோல்வி.