Sunday, September 13, 2009

வார இறுதியில் - 3

அரசியல், விளையாட்டு: இரண்டிலும் பணம் புரள்வதால் நாகரிகததுக்கு இடமில்லை என்று ஜோ வில்சனும், செரினா வில்லியம்ஸும் நிரூபித்துள்ளனர். ஜோ வில்சன் தென்கரோலினா மாகானத்தைச் சேர்ந்தவர். ஒபாமாவின் health care பேச்சின்போது, You liar என்று கத்தினார். ஒபாமா கொஞ்சம் கூட சலனமேயில்லாமல் அதை மிக நாகரீகமாக மறுத்துவிட்டு தன் பேச்சைத்் தொடர, இப்போது ஜோ அவரின் கட்சிக்காரர்களாலேயே கண்டிக்கப் பட்டிருக்கிறார்.

இத்தனைக்கும் ஜோ இராணுவத்தில் பணி புரிந்தவர். இராணுவத்தினருக்கு ஜனாதிபதி Commander-in-Chief. அந்தப் பதவிக்குரியவரையே எதிர்த்து முட்டாள்தனமாகக் கத்தியிருக்கிறார். புஷ் இராக் போரைப் பற்றி பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது கத்த வேண்டிய வார்த்தையை இப்போது கத்தி குடியரசு உறுப்பினர் தான் புஷ்-க்கு சளைத்த முட்டாள் இல்லை என்று நிரூபித்திருக்கிறார்.

விளையாட்டில் ஜோ-க்கு சளைக்காமல் செரினா நடந்த விதம் இன்னும் பைத்தியக்காரத்தனம். தேவையில்லாமல் Line Judge-ஐ திட்டி ஆட்டமும் இழந்து (இல்லையென்றாலும் கிம் எளிதாக வென்றிருப்பார்), $10000 டாலரும் இழப்பு.

இவர்கள் இருவரும் கற்க வேண்டிய முதல் பாடம் சபை நாகரிகம்.

நாட்டு நடப்பு: இந்த வார Outlook-ல் வந்த இரண்டு செய்திகள்:

1) வக்ஃப் வாரியத்தின் ஊழல்

வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமான நிலங்கள் ஏராளம். பல முகலாய, நிஜாம் மன்னர்களால் மானியங்களாக வழங்கப்பட்ட நிலங்களை நிர்வாகம் செய்கிறது. இதில் வரும் வருமானம் இஸ்லாமிய சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் அமையவேண்டும். பொதுவாக மாநில அரசுகள் தங்கள் கட்சியில் உள்ள இஸ்லாமிய உறுப்பினர்களை நியமனம் செய்யும். இதுவே ஊழல்களுக்கு வழி வகுக்கிறது. உதாரனமாக அனில் அம்பானி கட்டும் புது கட்டிடம் ஒன்றின் மதிப்பு 27 கோடி. ஆனால் விற்கப்பட்டதோ 16 லட்சத்திற்கு. அனில் 27 கோடி கொடுக்கவில்லையென்றாலும் கொடுத்த வரையில் 16 லட்சம் தவிர மீதி வாரிய தலைவர்/உறுப்பினர் பையில். அரசு தலையிட பயப்படுகிறது. தலையிட்டால் ‘இஸ்லாமிய மதத்திற்கு அபாயம்’ என்று கூக்குரல்.

2) குஜராத் போலீசின் (மோடியின் அடியாட்கள் என்று வாசிக்க) 2004 என்கவுண்டர் போலி என்று கண்டுப்பிடிப்பு.

2004-ல் மோடியைக் கொலை செய்யும் உத்தேசத்துடன் இருந்தவர்கள் என்று நான்கு பேரை (ஒரு பெண் உட்பட) குஜராத் போலீஸ் பம்பாய் அருகே சுட்டுக் கொன்றது. ஆனால் 5 வருடங்கள் பிறகு, நீதிபதி தமங் அளித்த தீர்ப்பில் இது போலி என்கவுண்டர் என்று அறிவித்துள்ளார். ஆனால் மோடி அரசு பாய்ந்து இன்னொரு நீதிபதி மூலம் இந்த அறிக்கைக்குத் தடை வாங்கியுள்ளது.

Only in India.


No comments: